https://gumlet.assettype.com/vikatan/2020-10/02a93431-5e15-4a05-a3da-a5cada45ad4d/IMG_20201020_WA0070.jpg`ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க’வை சாடும் ஐ.பெரியசாமி

திண்டுக்கலில் உள்ள கலைஞர் மாளிகையில், தி.மு.க’வின் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருப்பதால், மக்கள் திட்டங்களை செயல்படுத்த நான் எடுக்கும் முயற்சிகளை ஆளும் அ.தி.மு.க அரசு தவிர்த்து வருகிறது. இருந்தபோதும், சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்த பணத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். கொடகனாறு நீர் பங்கீட்டுப் பிரச்னையில், விவசாயிகள் நலனுக்காவும், பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்காகவும் முழுவீச்சில் பணியாற்றிவருகிறேன்.

ஐ.பெரியசாமி

முன்னதாக நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு விவசாயிகள் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே தண்ணீர் பங்கீட்டில் பிரச்னை இருந்தது. அதனைக் களைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. சுமூக முடிவெடுக்கப்பட்டு, கொடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இனி வரும் காலங்களில் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு வல்லுனர் குழுவை அமைத்து, பிரச்னைக்குரிய இடத்தினை ஆய்வு செய்து முத்தரப்பின் கருத்துக்களைக் கேட்டு அரசிடம், வல்லுனர் குழு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

Also Read: `வத்தலக்குண்டைத் தொடர்ந்து நிலக்கோட்டை!' -ஐ.பெரியசாமி அசைன்மென்டால் பதறும் அ.தி.மு.க.

இந்நிலையில், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மூலம் என்னுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதாக புரளியை கிளப்பினார்கள். இது பொய்யான தகவல். நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தண்ணீர் செங்கட்டான்குளத்துடன் முடிவடைகிறது. தண்ணீர் அதிகமாக வரும் போது, அது நிலக்கோட்டை பகுதிக்கு குடிநீர் தேவைக்காக செல்லும். இது அனைவரும் அறிந்த உண்மை. அதனை தாண்டி வத்தலக்குண்டு போவதற்கு எந்த வாய்க்காலும் இல்லை. அதற்கு அடுத்தபடியாக, பிரச்னைகள் முடிந்து கொடனாற்றில் தண்ணீர் திறந்துவிட்ட போது, அனுமந்தராயன் கோட்டைப் பகுதியில் எனக்கு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், அதற்கு தண்ணீர் கொண்டு செல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்.

Also Read: `40 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை!' - தொண்டர்கள் மத்தியில் உற்சாகப்பட்ட ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

Also Read: `அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது!’ - ஐ.பெரியசாமி

கொடகனாறு தண்ணீர் பயன்படும் அனுமந்தராயன் கோட்டைப்பகுதியிலோ, நரசிங்கபுரம் தெற்கு வாய்க்கால் பகுதியிலோ எனக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. எனது நிலத்திற்காக தண்ணீரை நான் பயன்படுத்தியதாக யாராவது ஒருவர் நிரூபித்தாலும், அரசியலை விட்டு விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதனை நான் சவாலாகச் சொல்கிறேன். அவதூறுகளையும் பொய்ப் பிரசாரத்தையும் முன்னிறுத்தி விவசாயிகள் மற்றும் பொது மக்களை திசைதிருப்பி அதன் மூலம் ஆதாயம் தேடலாம் என்ற நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது. இதில் பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறது. இதுவரை எள் முனை கூட மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது. தற்போது விவசாயிகளிடம் மோதலை உருவாக்கி லாபம் பார்க்க இருக்கிறது. அது ஒரு போதும் நடக்காது.! இனியாவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் காட்டமாக.



from Latest News https://ift.tt/2Tckpnt

Post a Comment

0 Comments