https://gumlet.assettype.com/vikatan/2020-10/3a59e925-8705-4e61-8726-61ffe7a0a337/IMG_20201015_WA0058_01.jpegதேனி: `ரூ.60 செல்போன் கவரை 20 ரூபாய்க்குக் கொடுங்க!’- பேரத்தால் கடைக்காரருக்கு நேர்ந்த சோகம்

தேனி நகர் கடற்கரை நாடார் தெருவில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனைக் கடை வைத்துள்ளார் பகட்ராம் பல்தேவ். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பல்தேவ் உட்பட சிலர், கடந்த சில வருடங்களாக தேனி நகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகள் வைத்து நடத்திவருகின்றனர். இந்நிலையில், நேற்று (15.10.2020) இரவு இரண்டு இளைஞர்கள், பல்தேவின் கடைக்கு வந்துள்ளனர். தங்களுடைய செல்போனிற்கு கவர் கேட்டுள்ளனர். அதனை எடுத்துக்கொடுத்துள்ளார் பல்தேவ்.

படுகாயமடைந்த விக்ரம்.

Also Read: `வெடிவாழை நோய்க்கு ஹோமியோபதி மருந்து!' விவசாயிகளுக்கு தெம்பூட்டும் தேனி மருத்துவர்

இளைஞர்கள் விலையைக் கேட்க, ஒரு செல்போன் கவர் ரூ.60 என கூறியுள்ளார் பல்தேவ். அதை ரூ.20-க்கு கொடுக்குமாறு கேட்டுள்ளனர் அந்த இளைஞர்கள். `இவ்வளவு குறைவாக கொடுக்க முடியாது’ என கூறியிருக்கிறார் பல்தேவ். பேரம்பேசிய இளைஞர்கள், பல்தேவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்தேவ் கடை அருகே பேன்ஸி ஸ்டோர் கடை வைத்துள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம் என்பவரை அழைத்துள்ளார் பல்தேவ். இளைஞர்களிடம் விக்ரம் சமாதானம் பேச, அதனை ஏற்காத இளைஞர்களுக்கும் விக்ரமிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மூவருக்கும் கைகலப்பு ஏற்படவே, இளைஞர்களில் ஒருவர், தன்னுடன் வைத்திருந்த, மூட்டைகளைத் தூக்கப் பயன்படும் இரும்பினால் ஆன கூர்மையான கொக்கியை எடுத்து விக்ரமின் தலையில் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த விக்ரம்.

Also Read: `கிராமத்திலும் இப்போ பேபி போட்டோகிராபி ஹிட்!' - பேபி போட்டோகிராபர் தேனி சாந்தினி

இதில், விக்ரமின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே, இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். விக்ரமை மீட்ட அவரது நண்பர்கள், கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தேனி நகர் போலீஸார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சியினை வைத்து, இளைஞர்களைத் தேடிவருகின்றனர்.

செல்போன் கவரை விலை குறைவாக கேட்ட விவகாரம், ஒருவரின் தலையை பதம்பார்க்கும் வரை சென்றது, அப்பகுதியில் கடை வைத்து நடத்துபவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/3nSuxQu

Post a Comment

0 Comments