https://gumlet.assettype.com/vikatan/2020-11/0003d248-62db-4a68-bb99-26e02a82116c/c503bce4_6904_4b05_ba4c_f573eaa945a8.jpg`இனி என்னால் வாழ முடியாது’ - திருமணமான ஓராண்டுக்குள் விபரீத முடிவெடுத்த உளவுத்துறை அதிகாரியின் மனைவி

சென்னை, அடையாறு ராஜாஜி பவனில் உள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக ஹரிஸ்குமார் (30) என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி நிகிதா (23). இவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தை சேர்ந்தவர். பி.டெக் படித்த நிகிதாவுக்கும் ஹரிஸ்குமாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை பெசன்ட் நகர், பஜனைக் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் வசித்து வந்தனர்.

உளவுத்துறை அதிகாரியுடன் அவரின் மனைவி நிகிதா

கடந்த 25-ம் தேதி படுக்கையறையில் நிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்வதற்கு முன் நிகிதா, கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘‘இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நிகிதா மரணம் குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நிகிதாவின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது வரதட்சணை கொடுமை, மதமாற்றம் என சில தகவல்களைத் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, நிகிதாவின் கணவர் ஹரிஸ்குமார், மாமியார் ரமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். நிகிதாவுக்கு திருமணத்தின் போது லட்சக்கணக்கில் வரதட்சணையாக பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நகைகளும் சீர்வரிசை பொருள்களும் நிகிதாவின் குடும்பத்தினர் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: சென்னை: கொரோனாவால் வேலை இழந்த டிரைவர்! - ரூ.3 லட்சம் கடனால் தற்கொலை

தற்கொலை

அதன்பிறகும் நிகிதாவிடம் ஹரிஸ்குமார் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்திவருகிறோம். நிகிதாவுக்கு திருமணமாகி ஒராண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கைக்குப்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதற்கிடையில் நிகிதாவின் மரணத்துக்கு இன்னொரு காரணமாக மதமாற்றம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது. இந்தநிலையில் நிகிதாவின் சடலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் திருமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு எஸ்.ஐ. பாரதி சென்று நிகிதாவின் வழக்கு குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், எஸ்.ஐ பாரதியை அவதூறாக பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதுதொடர்பாக எஸ்.ஐ , திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதன்காரணமாக நிகிதாவின் ஆர்.டி.ஓ விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.



from Latest News https://ift.tt/2VkvbZT

Post a Comment

0 Comments