https://gumlet.assettype.com/vikatan/2020-11/fc7a38af-e17c-4deb-98ff-dc9faa1b17f3/AP20334577105012.jpgநைஜீரியா: 110 விவசாயிகள் கொடூர கொலை! - போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 'போகோ ஹரம்' (Boko Haram) பயங்கரவாத அமைப்பினர் 110 விவசாயிகளை கட்டி வைத்து, தலையை துண்டித்து, உடல் உறுப்புகளை அறுத்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மிகவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் மக்கள் உணவுக்கு வழியின்றி பசியில் தவித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 2009 ம் ஆண்டு முதல் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பினர், அப்பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ முயற்சித்து வருகின்றனர். நைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹரம், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் மோதிக்கொள்வதில் அப்பாவி மக்கள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மக்கள் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற கோபத்தில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் மக்கள் மீதான மனிதத்தன்மையற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரியா

நைஜீரியாவின் வடமேற்கு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் நிலவும் பஞ்சம் காரணமாக, 600 மைல் பயணித்து வடகிழக்கு பகுதியில் விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, போகோ ஹரம் பயங்கரவாதிகள் இவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை முப்பதாயிரம் விவாசயிகள் இம்மாதிரியான தாக்குதல்களில் பலியாகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் போர்னோ ஸ்டேட் பகுதியருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் விவசாயிகள், விவசாய நிலங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த போகோ ஹரம் பயங்கரவாதிகள், விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போகோ ஹரம் பயங்கரவாதிகள் அங்கிருந்த 110 விவசாயிகளை கடத்தி, கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். அதையடுத்து 110 விவசாயிகளையும் கொடூரமான முறையில் தலையை துண்டித்து, உடல் உறுப்புகளை அறுத்து, சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். இன்னும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த 10 க்கும் மேற்பட்ட பெண்களையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நைஜீரியா மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரியா

இச்சம்பவம் குறித்து பேசிய ஐ.நா. சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் கல்லோன் (Edward kallon), "போகோ ஹரம் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். கொடூரமான இந்த செயலை செய்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்றார். மேலும், நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி இந்த தாக்குதலைக் கண்டித்து, “இந்த விவேகமற்ற கொலைகளால் முழு நாடும் காயமடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

போகோ ஹரம் அமைப்பினர் கடத்தி சென்ற பெண்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. இராணுவம் மற்றும் அரசாங்க சார்பு போராளிகளுக்காக மக்கள் உளவு பார்த்ததாக கூறி, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.



from Latest News https://ift.tt/33uemQQ

Post a Comment

0 Comments