https://gumlet.assettype.com/vikatan/2021-04/2c626781-6a32-4775-98e7-5f882eaa82e1/WhatsApp_Image_2021_04_30_at_1_28_33_PM.jpeg'சென்னை: மாணவன் கடத்தல் - போதையால் தப்பிய பின்னணி - வசமாக சிக்கிய குற்றவாளிகள்!'

கொளத்தூரில் சிறுவனை கடத்தி 2 லட்சம் ரூபாய் கேட்ட கடத்தல்காரர்களை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.சென்னை கொளத்தூர், வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் கணேசன் (48) . இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரின் மகன் விக்னேஷ் (14).பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு 8:30 மணியளவில் விக்னேஷ், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் அவ்வழியாக வந்திருக்கின்றனர். அவர்கள் விக்னேஷிடம் பேச்சு கொடுத்திருக்கின்றனர் பின்னர் பைக்கில் விக்னேஷை கடத்திச் சென்றனர். விக்னேஷை காணவில்லை என அவனின் தந்தை கணேசன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த சமயத்தில் கணேசனுக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், "உன் மகனை கடத்தி வைத்திருக்கிரோம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் உயிரோடு விட்டு விடுகிறோம்" எனக் கூறியுள்ளார் . அதைக் கேட்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தத் தகவலை போலீஸாரிடம் கணேசன் கூறினார். அதனால் அவருக்கு வந்த போன் நம்பரின் சிக்லை போலீஸார் ஆய்வு செய்தனர். இரவு 11 மணியளவில் விக்னேஷ் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர் இதையடுத்து விக்னேஷிடம் அவனின் பெற்றோர் விசாரித்தனர். அதன் பிறகு விக்னேஷ் வீட்டுக்கு வந்த தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்

இதையடுத்து ராஜமங்கலம் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான போலீஸார் விக்னேஷிடம் கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்தனர்.அப்போது விக்னேஷ் கூறிய தகவல் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு போதையில் இருவர் இருந்தனர் அவர்களைப் பிடித்த போலீஸார் அதிகாலை 1:30 மணியளவில் காவல் நியைத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, கச்சினாக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன், 29, அவரது கூட்டாளி அஜித்குமார், 24 ஆகியோர் என தெரியவந்தது. இவர்களில் லோகேஸ்வரன் மீது கொலை வழக்கு குழந்தை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளன இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் கூறுகையில், ''லோகேஸ்வரன் ஏற்கனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டு போலீஸில் சிக்கியுள்ளான். மீண்டும் பணத்திற்காக சிறுவனை கடத்தியுள்ளான். விக்னேஷைக் கடத்திய லோகேஸ்வரன், அஜித் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர் பின்னர் இருவரும் மது அருந்தியிருக்கின்றனர். போதையில் இருவரும் நன்றாக தூங்கிவிட்டனர். அந்தச் சமயத்தில் விக்னேஷ். அங்கிருந்து தப்பி வந்துவிட்டான் " என்றனர்.



from Latest News https://ift.tt/3u84NCv

Post a Comment

0 Comments