https://gumlet.assettype.com/vikatan/2021-07/48974fb2-aa22-48b2-898f-278c821665e8/Screen_Shot_2021_07_31_at_10_39_46_AM.pngநயன்தாராவின் டீ கடை பாசம்... விக்னேஷ் சிவனின் மீது கோடிகளில் நேசம்!

ஹைடெக் டீ கடைகள் நகரங்களில் பெருகிக்கொண்டே வருகின்றன. பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் டீ கடைகளை புதிதாகத் தொடங்கி வருகின்றன. அந்த வரிசையில் 'சாய் வாலே' எனும் நிறுவனமும் வேகமாக தனது கிளைகளைத் தொடங்கிவருகிறது. அந்த நிறுவனத்தில் ஏஞ்சல் இன்வெஸ்ட்டராக பண முதலீடு செய்திருக்கிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணை.

பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சினிமாவைத்தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது இதுதான் முதல்முறை.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இதுதொடர்பாக சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். ''நயன்தாரா எப்போதும் மனிதர்களை மட்டுமே நேசிப்பவர். அவருக்கு பணம், பொருள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். உண்மைக் காதல், நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், அவரிடம் உண்மையாக இல்லாவிட்டால் அடுத்த நிமிடமே தூக்கி தூரப்போட்டுவிடுவார்.

கடந்த பல ஆண்டுகளாகவே விக்னேஷ் சிவனுடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நயன்தாரா எல்லா முதலீடுகளையும் விக்னேஷ் சிவனின் பெயரில் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார். வீடு, கார், நிலம் என அவர் வாங்கும் எதுவாக இருந்தாலும் விக்னேஷ் சிவனின் பெயரிலேயே அதைப் பதிவு செய்கிறார். அந்த வகையில் இந்த முதலீட்டிலும் விக்னேஷ் சிவனையே இன்வஸ்ட்டராக இணைத்திருக்கிறார்'' என்கிறார்கள்.



from Latest News https://ift.tt/3ieraCz

Post a Comment

0 Comments