https://gumlet.assettype.com/vikatan/2021-08/a6c3aa24-4503-4394-82c5-8906a5ac1d58/Rohit_Guliya.jpgப்ரோ கபடி லீக் சீசன் 8: ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ரோஹித் குலியா!

கடந்த ஏழு சீசன்களாக மெகா ஹிட்டடித்த ப்ரோ கபடி லீக் தற்போது 8வது சீசனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல்-க்கு அடுத்ததாக அதிகப்பேரால் பார்க்கப்படும் லீக்தான் இந்த ப்ரோ கபடி லீக். சென்னை ‘தமிழ் தலைவாஸ்’ டூ ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் வரை மொத்தம் 450 வீரர்களுடன் 12 அணிகளாக கோதாவில் சந்திக்கவுள்ளன.

அந்த வகையில் இந்த வருடம் ப்ரோ கபடி லீக்கின் 8 சீசனுக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அபிஷேக் பச்சன், பிரணவ் அதாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அபிஷேக் பச்சன், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ரோஹித் குலியா

Also Read: "தாலிபன்கள் பாசிட்டிவான மனநிலையில் இருக்கிறார்கள்!"- ஷாகித் அப்ரிடியின் பேட்டியும் சர்ச்சையும்!

பின்னர், மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் 8வது சீசன் எப்போது தொடங்கும் என்று கேள்வியெழுப்ப, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உறுதியாக தேதியை அறிவிப்பதில் கொஞ்சம் சிக்கல்கள் இருப்பதால் தற்போது அறிவிக்க இயலாது. ஆனால், கூடிய விரைவில் தேதியை அறிவிப்போம், அரசாங்கம் விதித்துள்ள கொரோனா விதிகளுக்கு உட்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் போட்டிகள் நடத்தப்படும்” என்று பிரணவ் அதாணி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாலை 6:30 மணியளவில் தொடங்கிய ஏலத்தில் தற்போது வரை நடைபெற்றுள்ள ஏலத்தில் ரோஹித் குலியா 83 லட்ச ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக சுர்ஜீத் சிங் 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.



from Latest News https://ift.tt/3mIbUka

Post a Comment

0 Comments