https://bit.ly/3g7feAP Vikatan: தடுப்பூசிக்குப் பிறகு விட்டுப் போன சுவை உணர்வு; என்னவாக இருக்கும்?

என் கணவருக்கு வயது 59. இதய அடைப்பு ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவுக்கான இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டார். அதன் பின் மூன்று மாதங்களாக அவருக்கு சாப்பிட்டால் சுவை ஏதும் தெரியவில்லை என்று சொல்கிறார். என்ன காரணமாக இருக்கும்?

- மும்தாஜ் பேகம் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``தடுப்பூசிக்குப் பிறகு சுவை தெரியாமல் போனதாக நீங்கள் குறிப்பிடுவது தெளிவற்ற ஓர் அறிகுறியாக இருக்கிறது. நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் இப்படிப்பட்ட பிரச்னை வராது. எனவே இந்தப் பிரச்னையைத் தனியே பார்க்க வேண்டும்.

கோவிட் தொற்றுள்ளவர்களுக்கு சுவை உணர்வு இல்லாமல் போகலாம். உங்கள் கணவர் விஷயத்தில் சுவை இல்லாதது தனிப் பிரச்னையாகவே தெரிகிறது. எனவே நீங்கள் உங்கள் கணவரை பல் மருத்துவரை அணுகி, பல், ஈறு தொடர்பான பிரச்னை ஏதும் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள்.

A health worker administers the vaccine

Also Read: Doctor Vikatan: மாலையில் போகும் வாசனை உணரும் திறன், காலையில் திரும்புகிறது; என்ன பிரச்னை?

அடுத்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறச் சொல்லுங்கள். தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://bit.ly/35yvf0F

Post a Comment

0 Comments