https://gumlet.assettype.com/vikatan/2022-02/764b175b-f84e-4926-a95b-4bd259e17f54/FJ7e0oiaUAQm_Am.jpgமேற்கு வங்கம்: வரலாற்றில் முதல் முறையாக அதிகாலை 2 மணிக்கு கூடும் சட்டப்பேரவை! - காரணம் என்ன?

மேற்கு வங்க சட்டமன்ற கூட்டம் மார்ச் 7-ம் தேதி அதிகாலை 2 மணிக்குக் கூடும் என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வரலாற்றில் முதன் முறையாக அதிகாலை 2 மணிக்கு மேற்கு வங்க சட்டப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இது வழக்கத்துக்கு மாறாது என்றாலும், மாநில அமைச்சரவையின் முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஜகதீப் தன்கர்

இது தொடர்பாக வெளியான தகவலில், மாநில சட்டமன்ற கூட்டத்துக்கான அழைப்பில் பிற்பகல் 2 மணி என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பி.எம்(PM) என்ற குறியீடு தட்டச்சு பிழையால் ஏ.எம்(am) என மாறியுள்ளது. இது தொடர்பாக மாநில அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கே கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜக்தீப் தன்கர் - மம்தா பானர்ஜி

இந்த விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தலைவர் பிமன் பானர்ஜி, ``இது சாதாரண தட்டச்சுப் பிழை. மாநில அரசின் ஒப்புதலுடன் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என விளக்கமளித்துள்ளார்.



from Latest News https://ift.tt/UpiCXzP

Post a Comment

0 Comments