https://gumlet.assettype.com/vikatan/2021-07/65307a7e-a043-43f1-bb12-6b8d39e9c45d/IMG_20210724_171520.jpg``அண்ணாமலை அரசியல் பேச தெரியாமல், அவதூறு பேசி வருகிறார்!” - எம்.பி.திருமாவளவன்

சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை நேற்று வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போர் தான் காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்கமுடியாது.

ஏனென்றால் அங்கு போர் தொடங்குவதற்கு முன்பே இங்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக தான் இருந்து வந்தது. இதெல்லாம் மக்கள் மீது கொஞ்சம் கூட மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது. இதில் அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களையும், தனியாருக்கு தாரை வார்க்கும் வேலைகளை மோடி ஆட்சி முழு மூச்சாய் செய்துவருகின்றனது. இதனை கண்டிக்கும் விதமாக இன்றும், நாளையும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்” என்றார். மேலும் அவரிடம் முதல்வரின் துபாய் பயணம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது,

அண்ணாமலை

``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டிருப்பது நம்பிக்கை தருகிறது. கண்டிப்பாக தமிழக பொருளாதர வளர்ச்சிக்கு இந்த பயணம் ஒரு பயனுள்ளதாக இருக்கும். கடந்த 10 மாத தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை அகில இந்திய அளவில் அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அரசியல் பேச தெரியாமல் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து அவதூறு பேசி வருகிறார். தன் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் தி.மு.க- வை பற்றியும், முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார்” எனக் கூறினார்.



from Latest News https://ift.tt/LXxQ2EW

Post a Comment

0 Comments