https://gumlet.vikatan.com/vikatan/2022-03/38af9a68-8653-487f-8001-b138cbfba9ef/IMG_20220330_WA0000.jpg`விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை?' - திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``கடந்த வாரம் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை,

வானதி சீனிவாசன்

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கைகள் இல்லை, புதிய சாலைகள் போடவில்லை, குடிநீர் விநியோகம் சரியில்லை என்பதை பதிவு செய்தேன். சட்டமன்றத்தில் என்னை பேச விடாமல் பல்வேறு துறை அமைச்சர்கள் இடையூறு செய்தனர்.

வரிக்கு வரி அமைச்சர்கள் நீண்ட நேரம் விளக்கம் கொடுத்து, என்னுடைய பேசும் நேரத்தை குறைக்கின்றனர். நான் பேசியது தொடர்பான வீடியோக்களை கூட சட்டப்பேரவையில் இருந்து பெற முடியவில்லை. ஆனால் அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகின்றது.

வானதி சீனிவாசன்

பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்தது கிடைக்கவில்லை. கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொலுசு மட்டும் கிடைத்தது என்று பேசினேன், அதில் கொலுசு என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டனர். சிறு குறு தொழில்களை ஊக்கப்படுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லை.

பாஜக சித்தாந்தத்துக்கு ஆதரவாக பேசும், மருத்துவர் சுப்பையா, மரிதாஸ் போன்றவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விமர்சனம் வைத்தால் இந்த அரசுக்கு ஏன் தாங்க முடியவில்லை. கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா. மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இலக்கு வைத்ததை செய்ய முடியவில்லை.

மருத்துவர் சுப்பையா

ஆனால் மத்திய அரசு நிதி வருவாயை பகிர்ந்து அளித்துள்ளது. இதனால் 24% உயர்ந்த வரி வருவாயை தமிழகத்துக்கு வழங்கி இருக்கிறது. மத்திய அரசு வரியை வசூல் செய்து தமிழகத்திற்கு கொடுக்கிறது. மாநில அரசு நிதி வருவாயை வசூலிக்க எதுவும் செய்யவில்லை" என்றார்.



from Latest News https://ift.tt/lOJQYLX

Post a Comment

0 Comments