https://gumlet.vikatan.com/vikatan/2022-03/c9460ae2-6342-4cfc-bd7f-b60fdbe8c32d/IMG_20220328_WA0015.jpgவிருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி!

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22வயது பட்டியல் வகுப்பு இளம் பெண்ணை அவரின் காதலர் ஹரிஹரன் உள்பட 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் காதலரும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்த ஹரிஹரன் அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த ஜூனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிபிசிஐடி அலுவலகம்

இதில் ஹரிஹரனும் அவரின் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி சிறுவர்கள் நான்கு பேரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன் உள்பட 4 பேரும் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் குற்றவாளிகளை, காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் ஹரிஹரன் உட்பட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனுவின் பேரில், 'இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்களை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸார், ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Latest News https://ift.tt/mBOoT0b

Post a Comment

0 Comments