https://gumlet.vikatan.com/vikatan/2022-09/f67ef7ef-1535-4a99-a221-b2e1adcaa833/Protest_4_1200x768.jpegமாணவிகளுக்கு வகுப்பறையில் ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்... அடித்து செருப்பு மாலை அணிவித்த பொதுமக்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் துகாராம். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல்ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாகத் தெரிகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் இது பற்றி போலீஸில் புகார் செய்தனர். ஆனால் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே கிராம மக்கள் அந்த ஆசிரியரின் முகத்தில் மை தெளித்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து ஆசிரியரை மீட்டனர்.

அந்த ஆசிரியரைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்பவேண்டும் என்று கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி பாசுதேவ் தெரிவித்திருக்கிறார்.

ஜார்க்கண்டின் மற்றொரு பகுதியில் 13 மாணவர்களை ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் பூட்டி வைத்து பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறார். இந்த மாநிலத்திலுள்ள கும்பா என்ற இடத்தில் செயல்படும் செயின்ட் மிக்கேல் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் விகாஷ் எனபவர் வகுப்பறையில் மாணவர்களிடம் நடனமாடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் ஆசிரியரின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்த மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டனர். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களின் குறையைக் கேட்காமல் வகுப்பு ஆசிரியர் விகாஷிடம் மாணவர்களை அடிக்கும்படி கேட்டிருக்கிறார். உடனே விகாஷ் மாணவர்களை வகுப்பறையில் பூட்டி பிரம்பால் கண்மூடித்தனமாக அடித்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி உறுதியளித்தார்.



from Latest News https://ift.tt/H0iSypw

Post a Comment

0 Comments