https://gumlet.vikatan.com/vikatan/2022-10/4ce6b3bf-6412-46bd-b956-d9c1ba32ab77/FgUgjYQaYAEWTjz.jfif``இப்படியே சென்றால் இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சிதான்" - எச்சரிக்கும் மம்தா

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள, தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில், நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி யு.யு. லலித் முன்னிலையில், மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவது கவலை அளிக்கிறது. மேலும் இந்த போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

நாட்டின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாப்பை இந்திய நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. ஜனநாயகம் எங்கே? நீதிபதி அவர்களே தயவுசெய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விஷயங்கள் நடக்கிறது.

இதை குறிப்பிடுவதற்கு நான் வருந்துகிறேன். என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும். மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று நான் கூறவில்லை, ஆனால் நாட்டில் மோசமான நிலைமை நிலவிவருகிறது'' என்றார்.



from Latest News https://ift.tt/mhSOt6X

Post a Comment

0 Comments