https://gumlet.vikatan.com/vikatan/2022-11/8081e167-c961-43e1-a1ef-781f65497175/ttdse16_adani_reuters__625x300_07_November_22.webpமும்பை தாராவி: ரூ.20 ஆயிரம் கோடி திட்டம்... குடிசை பகுதிகளை மேம்படுத்த அதானி நிறுவனம் தேர்வு!

ஆசியாவிலேயே அதிக குடிசைகளைக்கொண்ட பகுதியாக அறியப்படும் தாராவியில் 60 ஆயிரம் குடும்பங்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இக்குடிசைகளை மேம்படுத்தும் திட்டம் நீண்ட நாள்களாக கிடப்பில் இருந்து வந்தது. இத்திட்டத்தை செயல்படுத்த பல முறை டெண்டர் விடப்பட்டு இறுதியில் கைவிடப்பட்டது. தற்போது புதிய அரசு பதவியேற்றவுடன் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்த கடந்த அக்டோபர் மாதம் டெண்டர் விட்டு இருந்தது. இம்முறை டெண்டரில் 8 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் அதானி, டிஎல்எப் உட்பட 3 நிறுவனங்கள் மட்டும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டது.

259 ஹெக்டேர் பரப்பு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்திற்கு ஆரம்ப கட்ட முதலீடாக அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்திருந்தது. 20,000 கோடி கொண்ட இத்திட்டத்தில் பங்கேற்ற டிஎல்எப் நிறுவனம் ஆரம்பக்கட்ட முதலீடாக 2,026 கோடி முதலீடு செய்யப்படும் என்று டெண்டரில் குறிப்பிட்டு இருந்ததாதாக தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனம் குறைந்தபட்சமாக 1,600 கோடி ஆரம்பக்கட்ட முதலீடாக போட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இது குறித்து ஸ்ரீனிவாசன் மேலும் கூறுகையில், ``தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்த அதானி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. டெண்டர் விபரம் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தாராவி

மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும். மாநில முதல்வர் இவ்விவகாரத்தில் இரண்டு வாரத்தில் இறுதி முடிவு எடுப்பார். 2.5 சதுர கிலோமீட்டரில் இருக்கும் 60 ஆயிரம் குடிசைவாசிகள், 13 ஆயிரம் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள. அதானி நிறுவனம் இலவச அடுக்கு மாடி குடியிருப்புக்களை கட்டிக்கொடுக்கும். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தது போக எஞ்சி இருக்கும் நிலத்தில் அதானி நிறுவனம் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி விற்பனை செய்து கொள்ளும். அதானி நிறுவனம் இத்திட்டத்திற்காக மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கும். அதில் மாநில அரசுக்கு 20 சதவீத பங்கும் அதானி நிறுவனத்திற்கு 80 சதவீத பங்கும் இருக்கும். பணி ஆர்டர் கிடைக்கப்பட்டதில் இருந்து 7 ஆண்டுக்குள் பணிகளை முடித்துக்கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு குடிசைவாசிகளுக்கும் 405 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதானி நிறுவனம் இலவச வீடுகள் பெற தகுதியானவர்கள் தொடர்பாக புதிய கணக்கெடுப்பு நடத்தும். இலவச வீடு பெற தகுதியில்லாதவர்கள் நிலம், கட்டுமான செலவை கொடுத்து வீடு பெற்றுக்கொள்ளவேண்டும். முதல் கட்டமாக குடிசைவாசிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் கணிசமாக நிலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அதானி நிறுவனத்திற்கு மாநில அரசு பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது.



from Latest News https://ift.tt/TXKIPLf

Post a Comment

0 Comments