https://gumlet.vikatan.com/vikatan/2023-01/1e7490b4-97e4-4bbb-b665-c4d9d9aac4e3/0.jpg`For Girls By Girls' Event: வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான பாதையைப் பகிர்ந்து கொண்ட மாணவிகள்!

பெண் குழந்தைகளுக்கான கல்வி, பெண்களுக்கான சம உரிமை சார்ந்து தொடர்ச்சி சமூகத்தில் குரல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக பல மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால், இன்றும் பழைமைவாதத்தைப் பின்பற்றும் மக்கள் இருக்கினறனர். அதை உடைத்துதான் பெண்கள் பொதுதளத்தில் சாதித்து வருகின்றனர். அத்தகையை பெண்கள் தங்களின் வாழ்க்கை பயணத்தை, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு CRYஅமைப்பு நடத்திய `For Girls By Girls' நிகழ்ச்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டனர். 

'For Girls By Girls' Event

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக Human rights educaction of protection council மனித உரிமை களம் இயக்குநர் பரதன் அவர்கள் தொடங்கி வைத்தார். இளம் பெண்களை பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு அவர்களை கூலி தொழில்களுக்கும் அனுப்புவதும் திருமணம் செய்து கொடுப்பதும் திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளில் இன்றும் நடக்கின்றன. இசக்கியம்மாள், முத்துலட்சுமி, ப்ரீத்தி மற்றும் அபிநயா அந்தச் சூழலிலிருந்து விடுபட்டு, தாங்கள் எப்படி போராடி கல்லூரி படிப்பை அடைந்தனர் என்பது குறித்து பகிர்ந்து கொண்டனர். 

திருநெல்வேலி மாவட்டம் , தேவர்குளம் என்ற ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி, 20 . மூன்று பெண் பிள்ளைகளுடன் பிறந்தவர். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது. CRY-Child Rights and You(NGO) உடன் இணைந்து செயல்படும் "மனித உரிமை களம்" தலையிட்டு அந்த திருமணம் தடுக்கப்பட்டது. தற்போது அவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் திருநெல்வேலியை சேர்ந்த community organizer வர்கீஸ்ராணி.

'For Girls By Girls' Event

இதுமட்டுமில்லாமல் சென்னை SC STEDS"The Slum Children's Sports Talent Education Development Society " மற்றும் "மனித உரிமை களம் " இயக்குனர் பரதன் உதவியுடன் இன்று கால்பந்து போட்டிகளில் கலக்கி வரும் இளம்பெண்கள் யமுனா, ஜனனி மற்றும் கார்த்தீஸ்வரி தங்களின் கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்த மூன்று பெண்களும் தற்போது கால்பந்து போட்டிகளில் சாதனையாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். உரிமை மறுக்கப்பட்ட பெண் குழந்தைகள் ஒரு போதும் தன் கனவை கைவிட வேண்டியதில்லை. இவர்களைப் போல இருக்கும் பல பெண்களுக்கு இந்த மாணவிகள் மிகப்பெரிய உந்துசக்தி என்பதாக இந்நிகழ்ச்சி அமைந்தது.



from Latest News https://ift.tt/oCTKF8G

Post a Comment

0 Comments