https://gumlet.vikatan.com/vikatan/2023-11/21be9b71-ba5d-44eb-833e-bb34787e073b/IMG_20231121_WA0033.jpg?w=280காதலுக்கு எதிர்ப்பு; தாலியை அறுத்தெறிந்து விரட்டியடித்த உறவினர்கள் - இளம்பெண் தற்கொலை முயற்சி

ராஜபாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று ரகசியத் திருமணம் செய்துகொண்டது. இதையறிந்த உறவினர்கள், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இளம்பெண்ணை விரட்டியடித்திருக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த இளம்பெண், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 24), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார்‌. இவரும், சோழபுரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி (வயது 20) என்பவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. மாரீஸ்வரி தனியார் ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், தங்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பும் என பயந்த இந்த ஜோடி, கடந்த 15-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில்வைத்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டது.

காதல் ஜோடி

தொடர்ந்து, தம்பதியாக கொடைக்கானலுக்கு சென்ற இவர்கள் அங்கு இரண்டு நாள்கள் தங்கியிருந்திருக்கின்றனர். அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய தம்பதி, சொந்த ஊருக்கு வராமல் தென்காசி மாவட்டம், பச்சேரியிலுள்ள சசிக்குமாரின் சித்தி முனியம்மாளின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு உறவினர்களிடம் பேசிய சசிக்குமார், 'நடந்த திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் வாங்கிவிட்டு மனைவி மாரீஸ்வரியை அழைத்துச் செல்கிறேன். அதுவரை பாதுகாப்புக்காக இங்கேயே இருக்கட்டும்’ எனக் கூறிவிட்டு தேவிப்பட்டினத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

இதையறிந்த சசிக்குமாரின் பெற்றோர், மகனின் ரகசியத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த சசிக்குமார், 'தன் மனைவி மாரீஸ்வரியை அழைத்துவருவதற்காக மீண்டும் சித்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சசிக்குமாரை வீட்டில்வைத்துப் பூட்டிய உறவினர்கள், மாரீஸ்வரியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரைத் தாக்கி, மாரீஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தெறிந்து வீட்டைவிட்டு வெளியே துரத்தியதாகக் கூறப்படுகிறது.

கொடைக்கானலில்..

இதையடுத்து நடந்த விவரங்களை போன் மூலம் பெற்றோரிடம் எடுத்துக் கூறி மாரீஸ்வரி அழுதிருக்கிறார். இதையடுத்து பதறிப்போய் வந்த அவரின் பெற்றோர், மாரீஸ்வரியை சோழபுரத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர். கணவரைப் பிரிந்து சோகத்தில் இருந்துவந்த மாரீஸ்வரி, மனமுடைந்து பிளீச்சிங் பவுடரைத் தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தற்கொலை தடுப்பு மையம்

இதையறிந்த உறவினர்கள் மாரீஸ்வரியை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் காதல் கணவர் சசிக்குமாரை மீட்டுத்தரக் கேட்டு தளவாய்புரம் போலீஸில் மாரீஸ்வரி புகாரளித்தார். அதன்பேரில் சசிக்குமாரின் சித்தி முனியம்மாள், சித்தப்பா கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/2WZkB9A

Post a Comment

0 Comments