https://gumlet.vikatan.com/vikatan/2026-08-24/echygljo/officer.jpg?w=280துகாராம் முண்டே: அதிரடி ரெய்டுகளுக்கு பெயர் பெற்றவர்; நாற்காலித் துணியை அகற்றியதால் மீண்டும் வைரல்!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே, தற்போது மற்றொரு நிகழ்வுக்காகச் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார். செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு தனது நாற்காலியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணியை அவர் அகற்றிவிட்டு அமர்ந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

அதிரடி ஆய்வுகளும் முண்டேவின் பிம்பமும்

2005-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான முண்டே, தனது கடுமையான நிர்வாக நடைமுறைகளுக்காக அறியப்பட்டவர். மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் (FDA) பொறுப்பேற்றது முதல், உணவகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களில் தொடர் சோதனைகளை நடத்தி வருகிறார். இவர் விதிமீறல் நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொதுவெளியில் தொடர் கவனத்தைப் பெற்று வருகின்றன.

விவாதிக்கப்படும் வி.ஐ.பி கலாசாரம்

இந்தச் சூழலில்தான் அவரது நாற்காலிக் காட்சி குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளன. அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் இருக்கைகளில் வெள்ளைத் துணி விரிக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. இருக்கையைப் பாதுகாத்தல் மற்றும் வெப்பத்தைத் தவிர்த்தல் போன்ற நடைமுறைக் காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும், இது ஒருவித வி.ஐ.பி கலாசாரத்தின் வெளிப்பாடாக விமர்சிக்கப்படுவதும் உண்டு.

நாற்காலித் துணியும் அதிகார அடையாளமும்

அந்தத் துணியை அவர் கழற்றிவிட்டு அமர்ந்த செயல், எந்தவிதமான சர்ச்சைக்குரிய விஷயமும் அல்ல; மாறாக, வழக்கமான வி.ஐ.பி கலாசார அடையாளத்தைத் தவிர்க்க அவர் விரும்பியதின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. சாதாரண ஒரு அதிகாரியாக, இதுபோன்ற ஆடம்பர நடைமுறைகள் தேவையில்லை என்று கருதியே அவர் அதை நீக்கியிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.



from Vikatan Latest news https://ift.tt/8EAlotW

Post a Comment

0 Comments