https://gumlet.assettype.com/vikatan/2020-10/8ecf1709-353c-40a8-ae29-f130470882cd/Suicide_Rep.jpgசென்னை: புத்தாண்டுக்கு பிரியாணி கேட்ட மாணவி - விபரீத முடிவை எடுத்ததால் குடும்பத்தினர் சோகம்

சென்னையை அடுத்த குன்றத்தூர், கிழக்குக் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பழனி. கார் டிரைவர். இவரின் மனைவி தேவி. இந்தத் தம்பதியினரின் மகள் தீபிகா (12). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தார் புத்தாண்டு தினத்தன்று அசைவ பிரியாணி சமைக்கும்படி தீபிகா, தேவியிடம் கூறியிருக்கிறார். அதற்கு இந்த ஆண்டு புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவதால் அசைவ பிரியாணி சமைக்க முடியாது என்று தேவி தெரிவித்திருக்கிறார். அதனால், மாணவி தீபிகாவுக்கும் தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனவருத்தத்தில் தீபிகா இருந்திருக்கிறார். பின்னர் அறைக்குச் சென்ற தீபிகா, நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் சந்கேமடைந்த குடும்பத்தினர் தீபிகாவின் அறைக் கதவை தட்டியிருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

அதனால், கதவை உடைத்து உள்ளே சென்றபோது தீபிகா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப்பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தீபிகாவை மீட்டு குடும்பத்தினர் முதலுதவி அளித்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா, ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also Read: நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முன் நடந்தது என்ன?- கைதான ஹேமந்த் அளித்த அதிர்ச்சித் தகவல்

தற்கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தீபிகாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபிகாவின் மரணம் குறித்து வழக்கு பதிந்த போலீஸார், அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பிரியாணி தொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்ட தகவல் தெரியவந்தது.



from Latest News https://ift.tt/34VEuVu

Post a Comment

0 Comments